Monday, February 09, 2009

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அபூர்வ பழைய பாடல்கள் -1

குயில் குதூகலம் பொங்கும்,எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அபூர்வ பழைய பாடல்கள் -1
[வானொலி நிகழ்ச்சி]

To listen this programme click below link

SPB SWEET SEVENTIES-1.mp3

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

Saturday, August 05, 2006

சிவாஜி பாடல்களில்.....ராகங்கள்..RAGAA BASED SONGS IN SIVAJI FILMS

1.கல்யாணி

மன்னவன் வந்தானடி ['திருவருட்செல்வர்']

சிந்தனை செய் மனமே...['அம்பிகாபதி']

2.சிந்து பைரவி

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...[திருவருட்செல்வர்']

என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்...['பாலும் பழமும்]

மணப்பாறை மாடு கட்டி...['மக்களைப் பெற்ற மகராசி']

3.முகாரி

வாடா மலரெ...தமிழ்த் தேனே..['அம்பிகாபதி'']

4.மலய மாருதம்

பெண்களை நம்பாதே...['தூக்குத் தூக்கி']

5.சண்முகப்பிரியா

பாட்டும் நானே...பாவமும் நானே...['திருவிளையாடல்']

நெஞ்சில் குடியிருக்கும்...['இரும்புத் திரை']

6.யமன் கலயாணி

இசை கேட்டால் புவி அசைந்தாடும்..['தவப் புதல்வன்']

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா...['தெய்வ மகன்']

7.கரஹரப்பிரியா

முத்துக்களோ கண்கள்...['னெஞ்சிருக்கும் வரை']

பூங்காற்று திரும்புமா?...['முதல் மரியாதை']

8.வாசந்தி

அன்பு நடமாடும் கலைக் கூடமே...['அவன் தான் மனிதன்']

9.தர்மாவதி

அம்மானை...அழகு மிகு கண்மானை...['அவன் ஒரு சரித்திரம்']

10.மத்தியமாவதி

ஆகாயப் பந்தலிலே...['பொன்னூஞ்சல்']


வேலாலே விழிகலள்...['என்னைப் போல் ஒருவன்']

11.மாய மாளவ கௌளை

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?..['ஆலய மணி']

அந்தப்புரத்தில் ஒரு மகராணி...['தீபம்']

12.சிவரஞ்சனி

நான் பேச நினைப்பதெல்லாம்...நீ பேச வேண்டும்...['பாலும் பழமும்']

13.ஆபேரி.

சிந்து நதிக்கரை ஓரம்...அந்தி நேரம்..['நல்லதொரு குடும்பம்']

14.பிருந்தாவன சாரன்கா

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...['கை கொடுத்த தெய்வம்']

பொன் ஒன்று கண்டேன்...['படித்தால் மட்டும் போதுமா?']


15.அடானா

யார் தருவார் இந்த அரியாசனம்?...['மஹாகவி காளிதாஸ்']


யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.


YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR

TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

இணைய சாகரத்தில் மூழ்கியெடுத்த இசை முத்துக்கள்...PART 2




'கந்தர்வ கான வித்தகர்' எம்.கே.தியாக ராஜ பாகவதரின்
தேடினாலும் கிடைக்காத அபூர்வ பாடல்களைக்
கேட்டு சிலிர்க்க இங்கே சொடுக்குங்கள்.

'இசை மணி' சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பற்றிய தளம்

'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இணையத் தளம்

'கலை மாமணி' சுதா ரகுநாதன் அவர்களின் இணையத்தளம்

எஸ்.சௌம்யா அவர்களின் இணையத் தளம்

KALAIMAMANI NITHYASREE MAHADEVAN

உன்னி கிருஷ்ணன் அவர்களின் தளம்

வீணை காயத்ரி கிரிஷ் அவர்களின் தளம்

எஸ்.எம்.சுப்பையாநாயுடு.

Friday, August 04, 2006

இணைய சாகரத்தில் மூழ்கியெடுத்த இசை முத்துக்கள்...PART 1




1.இசைத்தொகுப்பு: பாலாஜி பஞ்சரத்னமாலா

[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ராதா விஸ்வநாதன் ]

2.இசைத்தொகுப்பு: பஜகோவிந்தம் - விஷ்ணு சஹஸ்ரநாமம்
பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

3. இசைத்தொகுப்பு: மீரா
[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ]

4.இசைத்தொகுப்பு: சகுந்தலை [பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி]

5.இசைத்தொகுப்பு: சுப்ரபாதம்

[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ராதா விஸ்வநாதன்]

6.இசைத்தொகுப்பு: திருவேங்கடமுடையான் திருப்பள்ளிஎழுச்சி
[பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ராதா விஸ்வநாதன்]

7.இசைத்தொகுப்பு: திருப்பாவை [பாடியவர்கள்: எம்.எல்.வசந்தகுமாரி]

8.இசைத்தொகுப்பு: நாத சுத்த ரசா [பாடியவர்கள்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி]

9.இசைத்தொகுப்பு: அன்னமாச்சார்யா[பாடியவர்கள்:எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி]

10.ஸமாஜத்தில் சங்கீதம்...

11.ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்...

12.சாமானிய சங்கீதம்

13.டாக்டர்.எம்.எஸ்.சுப்புலஷ்மி - வாழ்க்கை வரலாறு - விருதுகள்...

Wednesday, August 02, 2006

கமல் படங்களில் ராகங்கள்..[PART - 1].RAAGA BASED SONGS IN KAMAL FILMS

உலக நாயகன் கமலுடன் யாழ் சுதாகர் ['பொம்மை' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது பொம்மை அலுவலகத்தில் எடுத்த படம்.]


1.சக்கரவாகம்

வானிலே தேனிலா ஆடுதே...பாடுதே...வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே...
நாமும்கொஞ்சம் ஆடலாமா?
[ படம் - 'காக்கிச் சட்டை' ]

வனிதாமணி...வனமோகினி...வந்தாடு....
கனியோ கனி...உன் ருசியோ தனி...கொண்டாடு...
[ படம் - 'விக்ரம்' ]

2.மோகனம்

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே...
பூ முத்தம் தந்தவனே...[படம் - 'சலங்கை ஒலி']

ஏ பீ சி...நீ வாசி...
எல்லாம் என் கை ராசி...
ஸோ ஈசி...
[ படம் - ஒரு கைதியின் டயரி ' ]

3. கம்பீர நாட்டை

இன்னும் என்னை என்ன செய்யப் போகின்றாய்...
அன்பே அன்பே....
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்...
முன்பே முன்பே...
[ படம் - 'சிங்கார வேலன்' ]

4.மத்தியமாவதி

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா...
[ படம் - 'சிப்பிக்குள் முத்து']

5. சாருகேசி ராகம்

சிறிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே...
உதடு உருக...அமுதம் பருக வருகவே...வருகவே...
[ படம் - 'அந்த ஒரு நிமிடம்' ]

6.' பீலு ராகம்

'முகுந்தா முகுந்தா'... [படம்-தசாவதாரம்]


7.நட பைரவி

அந்தி மழை மேகம்...
தங்க மழை தூவும் திரு நாளாம்.
எங்களுக்கும் காலம்
வந்ததென்று பாடும் பெரு நாளாம்.
[ படம்- 'நாயகன்']

8.ஆபேரி ராகம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா....
நான் வரைந்த பாடல்கள் ...
நீலம் பூத்த கன்ணிலா?
வராமல் வந்த என் தேவி...
[ படம் - 'வாழ்வே மாயம்']

9.கல்யாணி ராகம்

வந்தாள் மஹா லக்ஷ்மியே...
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே...
அடியேனின் குடி வாழ...தனம் வாழ...
குடித்தனம் புக வந்தாள் மஹா லக்ஷ்மியே...
[ படம் - 'உயர்ந்த உள்ளம்']

10.ஹம்ச நாதம்

பூ வாசம் புறப்படும் பெண்ணே...
நான் பூ வரைந்தால்...
[ படம் - 'அன்பே சிவம்']


LINK

யாழ் சுதாகர் கவிதைகள்.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Monday, July 31, 2006

ரஜினி பாடல்களில் ராகங்கள் PART --1....RAAGA BASED SONGS IN RAJINI FILMS

ரஜினி பாடல்களில் ராகங்கள்.... [PART - 1 ]


1.காபி ராகம்

ஏ....பாடல் ஒன்று...ராகம் ஒன்று...
சேரும் போது அந்த கீதம்...அதை
மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்...[படம்- 'பிரியா']

2.கீரவாணி ராகம்

ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்...
உலகம் புரிஞ்சுகிட்டேன்...கண்மணி... என் கண்மணி..
ஞானம் பொறந்திருச்சு...நாலும் புரிஞ்சிருச்சு...
கண்மணி...என் கண்மணி[படம்-' படிக்காதவன்']

3.ஹம்ஸத்வனி ராகம்

இரு விழியின் வழியே நீயா வந்து போனது?
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது?
[படம்- 'சிவா']

4.ஹம்ஸத்வனி ராகம்

வா ...வா...வா...கண்ணா வா...
தா...தா...தா கவிதை தா...
[ படம் - 'வேலைக்காரன்']

5.பந்துவராளி ராகம்

ழகு...அழகு...அழகு....
நீ நடந்தால் நடை அழகு..
.நீ சிரித்தால் சிரிப்பழகு...நீ பேசும் தமிழ் அழகு...
நீ ஒருவன் தான் அழகு...
.[படம் -பாட்ஷா]


6.சிந்து பைரவி ராகம்

நிலவே முகம் காட்டு...]
எனைப் பார்த்து ஒளி வீசு...
அலை போல் சுதி மீட்டு...இனிதான மொழி பேசு...
அழைத்தேன் உனையே...
இது தாய் மடியே...
[ படம் - 'எஜமான்' ]

7. திலங்கு ராகம்

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணிப் பொன்ணு அய்யர் ஆத்துப் பொண்ணு...
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜாப் போலே அய்யர் ஆத்துப் பிள்ளை...
[ படம்- 'வீரா' ]

8.கௌரி மனோஹரி ராகம்

முத்தமிழ் கவியே வருக....
முக்கனிச் சுவையே வருக...
காதலெனும் தீவினிலே...
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது...
[படம் - தர்மத்தின் தலைவன்' ]

9. கல்யாணி ராகம்

வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது
கையில் வராமலே...
நம்து கதை புதுக் கவிதை...
இலக்கணங்கள் இதற்கு இல்லை...
நான் உந்தன் பூமாலை...


10.கல்யாணி ராகம்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்...
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?
[ படம்- 'மன்னன்' ]


ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை ஒலிக்க விடுங்கள்...




கே.ஜே.ஜேசுதாஸ் ....
அவசர யுகத்தில் தொலைந்து போன வாழ்க்கையை

தேடிக் கண்டு பிடித்துத் தரும்
தெய்வீகக் குரல்!

தீர்த்தக் கரைதனிலே....
மந்திரமாய் மனம் தடவும்
சந்தனத் தென்றல்!

- - -

இலையுதிர் காலத்திலும்
இளவேனிற் காலத்தை அனுபவிக்கலாம்.

ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை ஒலிக்க விடுங்கள்.

- - -

தூக்கம் வராத ராட்சத இரவுகளிலும்
சாமரங்கள் வாங்கிசந்தோஷமாகத் தூங்கலாம்....

ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டைஒலிக்க விடுங்கள்!

- - -

ஏக்கங்களை எல்லாம்
தூக்கிப் போடலாம்...

ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை ஒலிக்க விடுங்கள்!

- - -காற்றின் அலைகள் எங்கும்....
பூக்கள்.... புதிது புதிதாக பூத்துக் குலுங்குவதை
பார்த்திருக்கின்றதா உங்கள் செவிகள்?

அப்படியானால்.....அப்போது...
ஜேசுதாஸின் பாடல் ஒன்று ஒலித்திருக்கக் கூடும்!

- - -
கஷ்டங்கள் அனைத்தும்
ஒரே மூட்டையாகக் கட்டப்பட்டு
இதயத்திலிருந்துஇறக்கி வைக்கப்பட்ட விந்தையை....

சந்தித்திருக்கிறதா உங்கள் வாழ்க்கை?

அப்படியானால்.....அப்போது ...
ஜேசுதாஸின் பாடல் ஒன்று ஒலித்திருக்கக் கூடும்!

நிஷ்டையில் இருந்த பின்பு கிடைக்கின்ற அமைதியை...
நிஷ்டையில் அமராமலேயே
நீங்களும் உனர்ந்தீர்களா?

அப்படியானால்.....அப்போது...
ஜேசுதாஸின் பாடல் ஒன்று ஒலித்திருக்கக் கூடும்!

- - -
ஜேசுதாஸ்...அவசர யுகத்தில் தொலைந்து போன வாழ்க்கையை
தேடிக் கண்டு பிடித்துத் தரும்
தெய்வீகக் குரல்!...

-யாழ் சுதாகர்

சுசீலாவுக்கும்.....அமுதென்று பேர்










சுசீலாவின் குரல் .....
சுந்தரத் தமிழின் வரம்!
சந்தனத் தென்றலின் தரம்!
நந்தவன சுகம்!

*****

பாடுவது .... நம் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வோடு
கேட்பவரை ஐக்கியப் படுத்தும்
பாட்டு பந்தம்! ஜீவ சொந்தம்!

*****

டி. எம். எஸ் மாதிரி நட்சத்திரங்களுக்கு ஏற்ப
குரல் மாற்றிப் பாடத்தெரியாத குயில்!

எல்லோருக்கும் ஒரே குரல்தான்!!

ஆனாலும்..... ஆடாது அசையாது நின்று பாடியபடி...
பத்மினியே பாடுவது போலவும்
சாவித்திரியே பாடுவது போலவும்
விஜயகுமாரியே பாடுவது போலவும்
ஜெயலலிதாவே பாடுவது போலவும்
கே. ஆர். விஜயாவே பாடுவது போலவும்

நேயர் நெஞ்சங்களில் ஒரு பாட்டு பிரமையை
கூட்டி வந்தாரே.....
எப்படி நேர்ந்தது இந்த இசை அற்புதம்?!

*****

எனக்கொரு சங்கீத சந்தேகம்!
சுசீலா .... தமிழிடமிருந்து
இனிமையை வாங்கி நமக்குத் தருகிறாரா?

இல்லை .... இவரிடம் இருக்கும் இனிமையை
தமிழ் .... இனங்காட்டித் தருகிறதா?!

*****

ஒருமுறை -'சுசீலாவின் சுந்தர கீதங்கள்' என்ற
வானொலி நிகழ்ச்சியை யான் தொகுத்து வழங்க நேர்ந்த போது ....
அவர் தேனமுதப் பாடல்களை தேர்ந்தெடுக்க
ஒரு பாடல் பதிவகம் போயிருந்தேன்.

அவர் பாட்டு மலர்களின் பட்டியலை
பாடல் பதிவாளர் என்னிடம் காட்டினார்.

அதில் எதை எடுப்பது ? எதைத் தொடுப்பது? என்ற
சங்கீதக் குழப்பத்தில் யான் மூழ்கியபோது ......
அவர் புலமையின் ஆழமும்,
பாடல் முத்துக்களின் வசீகரமும்
மறுபடியும் மறுபடியும் என்னை பிரமிக்கச் செய்தன!

*****

"சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" (எங்கிருந்தோ வந்தாள்)பாடலின் துவக்கத்தில் சங்கீதச் சிரிப்பால் அவர் கட்டிச்செல்லும்
சிங்காரத் தோரணம் ....

"தமிழுக்கும் அமுதென்று பேர்" (பஞ்சவர்ணக்கிளி)பாடலை
அவர் பாடி முடிக்கும் போது ......
"சுசீலாவுக்கும் அமுதென்று பேர்" என்று
எங்களைச் சொல்ல வைத்த சுந்தரம் ....

*****

"கலைமகள் கைப்பொருளே"(வசந்த மாளிகை)
"எண்ணப் பறவை சிறகடித்து" (கார்த்திகை தீபம்)
"கண்ணிலே அன்பிருந்தால்" .....
பாடல்களில்அவர் குரலிலே மிளிரும்
விலை மதிக்க முடியாத கருணை ....

*****
"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு" (சவாலே சமாளி) பாடலில்
எட்டிக் குதிக்கும் குயில் குதூகலம் ....

*****
"ஓராயிரம்" ....(சுமதி என் சுந்தரி) பாடலின்
ஆரம்ப ஆலாபனையில் கொடி நாட்டி.....
இறுதிவரை ராஜாங்கம் நடத்தும் பெருமிதம் ......

*****
"ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி" (நம் நாடு) பாடலின்தொடக்க ஆலாபனையில்
தாளத்தோடு துள்ளிக் குதிக்கும் வெல்ல நடை ....

*****
"சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" (ராமன் எத்தனை ராமனடி) பாடலில்முத்திரை பதிக்கும் நதியோட்டம் .....

*****

'பஞ்சவர்ணக்கிளி' படத்தில் இடம்பெற்ற
"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்"

'ராமு' படத்தில் பாசம் கொஞ்சிய "பச்சை மரம் ஒன்று" ....
"முத்துச்சிப்பி மெல்ல மெல்ல" .....

'அன்னமிட்டகை' படத்தில் தாலாட்டிய "பதினாறு வயதினிலே

"தாமரை நெஞ்சம் படத்தில் சீராட்டிய "ஆலயம் என்பது வீடாகும்

"கண்ணே பாப்பா படத்தில் கனிந்த "கண்ணே பாப்பா" ....

'சாந்தி நிலையம்' படத்தில் பொழிந்த "செல்வங்களே" ....
"இறைவன் வருவான்" .... "கடவுள் ஒருநாள்" .... ஆகிய பாச மழைகள்....(எனக்கும் ஒரு தமக்கை இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ)

*****
"கையோடு கை சேர்க்கும் காலங்களே" (காவியத் தலைவி)

"வசந்தத்தில் ஓர் நாள்"( மூன்று தெய்வங்கள்)

"மீனே மீனே மீனம்மா" (என் கடமை) ....பாடல்களில்....

கனவுகளுக்கு வண்ணம் தீட்டும் குரல் தூரிகை ......

*****

டி. எம். எஸ். பாடும் "வெள்ளிக் கிண்ணம்தான்" (உயர்ந்த மனிதன்) பாடலில் .....

ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்காமல்

ஆலாபனையை மாத்திரம் வைத்துக் கொண்டே

சௌந்தர ராஜன் குரலுக்கு சமமான சங்கீத அந்தஸ்தை

அந்தப் பாட்டிலே கொண்டு வந்த இசைப் புலமை ....

வழமையான பாணியில் இருந்து விலகிச்சென்று பாடிய
"தேடினேன் வந்தது" (ஊட்டி வரை உறவு)"
இன்று வந்த இன்ப மயக்கம்" ( காசேதான் கடவுளடா)"
ஆண்டவனின் தோட்டத்திலே" (அரங்கேற்றம்)"
அம்மம்மா காற்று வந்து" (வெண்ணிற ஆடை)
டார்லிங்க்..டார்லிங்க்..[பிரியா]...... பாடல்களால்....
தூவிச்சென்ற ராக போதை ....

*****

""மலர் எது" (அவளுக்கென்று ஓர் மனம்) பாடலில்
மலர்ந்த சங்கீத வசந்தம் .....

*****

"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல"(இதயக் கமலம்) பாடலில்
ஓங்கி ஒளிர்ந்த தெய்வீகக் காதல் ......

*****

"திருமகள் தேடிவந்தாள்" (இருளும் ஒளியும்) பாடலில்
பெருகி வழிந்த பூரிப்பு ....

*****

"இளமை கொலுவிருக்கும்" (ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்) பாடலில் கொலுவிருந்த இனிமை....

*****

'கண்ணா..கருமை நிறம் கண்ணா.....'[நானும் ஒரு பெண்]'
'உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா' [ராதா]'
நினைக்கத் தெரிந்த மனமே.....'[ஆனந்த ஜோதி]

மன்னவனே அழலாமா? [கற்பகம்]
"காலமகள் மடியினிலே" (ஓடும் நதி),
"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" (சித்தி)
பாடல்களில் காட்டிய
உருகாதவரையும் உருக வைக்கும் திருவாசக நேர்த்தி .....

.*****

"நான் உன்னைத் தேடுகிறேன்" (புகுந்த வீடு),
"எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா" (பூவும் பொட்டும்),
"உன்னை ஒன்று கேட்பேன்",

"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து" (புதிய பறவை),
"என்னைப் பாட வைத்தவன் ஒருவன்" (அரச கட்டளை),
"ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே" (நீல வானம்),
"மானாட்டம் தங்க மயிலாட்டம்" (ஆலய மணி),

"மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ" (பணமா பாசமா) பாடல்களில்
ஊறி வந்த ஊஞ்சல் உற்சாகம் .....

*****
"வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்" (அவசரக் கல்யாணம்),
"பால் போலவே வான்மீதிலே" (உயர்ந்த மனிதன்),

"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே" (கனிமுத்துப் பாப்பா) பாடல்களில்.....
குழலோசையாய் குழைந்து வந்த எழிலோசை ......

*****

"விளக்கேற்றி வைக்கிறேன்" (சூதாட்டம்)
"வெள்ளிக் கிழமை விடியும் வேளை" (நீ)
"எங்கே நீயோ" (நெஞ்சிருக்கும் வரை)"

வெள்ளி மணி ஓசையிலே" (இரு மலர்கள்)

"மலர்கள் நனைந்தன பனியாலே" (இதயக் கமலம்)
"சரவணப் பொய்கையில் நீராடி" (இது சத்தியம்)
"மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு" (முகூர்த்த நாள்)

"ராமன் எத்தனை ராமனடி" (லட்சுமி கல்யாணம்)
"தித்திக்கும் பாலெடுத்து" (தாமரை நெஞ்சம்)....'
மலரும் மங்கையும் ஒரு ஜாதி' [அன்னையும் பிதாவும்].....

பாடல்களில்அவர் மதுரக் குரலில் மலர்ந்த
'மகாலட்சுமி' களை ......

*****
"தாயின் முகமின்று நிழலாடுது" (தங்கைக்காக)
"தாய்தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா" (சரஸ்வதி சபதம்)
"பூஞ்சிட்டுக் கன்னங்கள்" (துலாபாரம்)

"கண்ணா கருமை நிறம் கண்ணா" (நானும் ஒரு பெண்)
"இறைவா உன் மாளிகையில்" (ஒளி விளக்கு)
"பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" பாடல்களால்....

காற்றில் கசிந்த ஈரம் ......

*****
சுசீலா .... தமிழிடமிருந்து இனிமையை வாங்கி
நமக்குத் தருகிறாரா?

இல்லை .... இவரிடம் இருக்கும் இனிமையை...
தமிழ் .... இனங்காட்டித் தருகிறதா?!

-யாழ் சுதாகர்



LINKS

1.கே.எஸ்.ராஜாவின் குரலைக் கேட்க...

2.டி.எம்.எஸ்ஸின் பாடல்களைக் கேட்க...


3.குயிலுக்குள் ஒளிந்திருக்கும் மயில்....எஸ்.பி.பாலசுப்ரமணியம்